உத்தரமேரூர் தவறான சிகிச்சை அளித்து பெண் மரணம் டாக்டரை கைது செய்ய உறவினர்கள் சாலை மறியல்
உத்தரமேரூர் ஒன்றியம் அமராவதிபட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (35) இவரது மனைவி இராஜேஸ்வரி (27) இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. 9 மாதத்தில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது செவ்வாய்கிழமை காலை இராஜேஸ்வரி உத்தரமேரூர் வி.பி.கோவில் தெரு உள்ள எ,வி,ஆர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்தனர் டாக்டர் வீரமணி பரிசோதனை செய்ததில் அப்பெண் கருவுற்று இருப்பதாகவும் கருவில் உள்ள குழந்தை பலவீனமாக இருப்பதாகவும் கூறினர்,. கருவை கலைத்து விட வேண்டும் என்று கூறியுள்ளனர். உறவினரிடம் கூறியபின் உறவினர் அனுமதியுடன் கரு கலைப்பு ஊசியினை டாக்டர் வீரமணி உடலில் செலுத்தினார். சிறிது நேரத்தில் பெண் இராஜேஸ்வரி உயிர் இழந்து உள்ளார். உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர் வீரமணியை கைது செய்ய வலியுறுத்தி அனைவரும் சாலை மறியல் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்ததும் சப்கலெட்டர் ஞானசேகரன் டி.எஸ.பி.இராஜேந்திரன் படாளம் இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம் வட்டாட்சியர் கே.தேவராஜன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை செய்து இராஜேஸ்வரி பிணத்தை செங்கை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் வீரமணியை காவல் துறையினர் கைது செய்து விசாரனைக்கு அழைத்து சென்றனர். பகல் 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை உத்தரமேரூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments