உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி பரிசளிப்பு விழா
உத்தரமேரூர் பிப் 28
உத்தரமேரூர்
மீனாட்சி அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியும் தமிழ்சங்கமும் இணைந்து
உத்தரமேரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமையன்று
மாணவர்களுக்கான தனித்திறனை வளர்க்கும் நோக்கில் நடத்திய கலை பண்பாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா பள்ளி திடலில் நடந்தது,.
உதவி தலைமை ஆசிரியர் ஸ்டார்லெட் வரவேற்றார். மீனாட்சி அம்மாள் கலை
அரிவியல் கல்லுாரி தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழி துறை தலைவரும் உத்தரமேரூர்
தமிழ்சங்கத்தின் புரவளருமான பேராசிரியர் க.முருகானந்தம் தலைமை தாங்கி
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளையும் வழங்கி
வாழத்தி பேசும் போது கிராமங்களில் ஏழ்மை குடும்பங்களில் பிறந்த மாணவர்கள் தான் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டு இன்றைய போட்டி உலகில் சாதனைகளை படைக்கின்றனர். என்று பாராட்டி பேசினார். தமிழ் சங்கத்தின் துணைத்தலைவர் என்.வினோத்குமார் துணைச்செயலாளர் எஸ்.இந்துமதி பொருளாளர் எஸ்.கோபிகிருஷ்ணா செய்தி அலுவலர் இ.சுந்தர் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி
பாராட்டி பேசினார்கள் பள்ளி தமிழ் ஆசிரியர்கள் டி.விஜயகுமார், ஜான்சிராணி
தொகுப்பரையாற்றினர். உதவி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.
No comments