Disqus Shortname

உத்திரமேரூரில் இலங்கைக்கு எதிராக உச்சகட்ட மாணவர்கள் போராட்டம்

அண்மைச் செய்தி
இலங்கை விவகாரத்தை முன்வைத்து நாளுக்கு நாள் தமிழகத்தில் வலுத்து வரும் மாணவர்கள் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாணவர்களுடன் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், இலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரண நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
உத்திரமேரூரில் மாணவர்கள் இன்று உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவும் பொதுமக்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள் என சகல தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

No comments