மயானகொள்ளை உற்சவம்
உத்திரமேரூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நிகழும் நந்தன வருடம் மாசி மாதம் 26-ந் தேதி (10-03-2013) ஞாயிற்றுக்கிழமை
இரவு சிவன்ராத்திரி உற்சவத்தில் பூங்கரகம்,சக்திகரகம்,அக்னிகரகம்,
மேலக்கச்சேரி, சிலம்பாட்டம், கரகாட்டம்
விளயான்புமேளம் மங்களவாத்தியத்துடன் புஷ்ப விமானம் பல்லாக்கில் அம்மன்
அலங்கார திருவீதி உலாவும், மறுநாள் மாசி மாதம் 27-ந் தேதி (11-03-2013) திங்கட்கிழமை (மயானகொள்ளை உற்சவம்) காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் , பகல் 12-00 மணிக்கு மேல் அன்னையின் மகிமையை
கண்ணுறும் வகையில் பக்தர்களின் மெய்சிலிர்க்க வைக்கும்
பிரார்த்தனை வழிபாடுகளுடன் அம்மன் திரு வீதி உலாவும், மாலை 6.00 மணிக்கு
மயானகொள்ளை உற்சவமும், இரவு கேளிக்கை கூத்தும் இவ்வருடம்
வெகுவிமரிசையாய் நடைபெற உள்ளது.
No comments