மக்களை தேடி வந்து உதவும் வருவாய்துறை அம்மா திட்டம் சேவை துவக்கம்
உத்தரமேரூர் மார்ச்-27
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க உத்தரமேரூர் தாலுக்கா
திருப்புலிவனம் ஊராட்சியில் செவ்வாய்கிழமையன்று மக்களை தேடிவந்து உதவும்
வருவாய்துறை அம்மா திட்டம் சேவை துவக்கவிழா நடந்தது.
ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கிழக்கு
ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தார். மண்டல
வட்டாட்சியர் கலைமணி, தனிவட்டாட்சியர் சரோஜா, வருவாய் ஆய்வாளர் தேன்மொழி,
கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் ஆகியோர் வருவாய் துறை அம்மா திட்டத்தின்
படி இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சமூகலநத்திட்டங்கள்,
பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு, சாதி மற்றும்
இருப்பிடம் சான்றிதழ்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து வழங்கினார்கள்.
திருப்புலிவனம் ஒன்றியக்குழு உறுப்பினர் கார்வண்ணன் நன்றி கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க உத்தரமேரூர் தாலுக்கா
திருப்புலிவனம் ஊராட்சியில் செவ்வாய்கிழமையன்று மக்களை தேடிவந்து உதவும்
வருவாய்துறை அம்மா திட்டம் சேவை துவக்கவிழா நடந்தது.
ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கிழக்கு
ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தார். மண்டல
வட்டாட்சியர் கலைமணி, தனிவட்டாட்சியர் சரோஜா, வருவாய் ஆய்வாளர் தேன்மொழி,
கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் ஆகியோர் வருவாய் துறை அம்மா திட்டத்தின்
படி இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சமூகலநத்திட்டங்கள்,
பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு, சாதி மற்றும்
இருப்பிடம் சான்றிதழ்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து வழங்கினார்கள்.
திருப்புலிவனம் ஒன்றியக்குழு உறுப்பினர் கார்வண்ணன் நன்றி கூறினார்.
No comments