வெங்கடேஸ்வரா நர்சரி பள்ளி 32- ம் ஆண்டு விழா
உத்தரமேரூர் மார்ச்,25
உத்தரமேரூர்
வெள்ளை செட்டித் தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா நர்சரி பிரைமரி
பள்ளியின் 32-ம் ஆண்டு விழாவும் மற்றும் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
விழாவும் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் திங்களன்று நடந்தது.
பள்ளி நிர்வாகி ஆர்.பொற்செல்வி தலைமை தாங்கினார். மல்லியங்கரணை ஸ்ரீ
ராமகிருஷ்ணா மடம் செயலாளர் சுவாமி அமிர்தானந்தா முன்னிலை வகித்தார். 5-ம்
வகுப்பு மாணவன் பெரோஸ் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி
ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டு போட்டிகள், மாறுவேட போட்டிகளில்
பங்கேற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ராணிப்பேட்டை பவர்
சிட்டி செயலாளர் ஜெ.செந்தில்முருகன், மல்லியங்கரணை ராமகிருஷ்ணா பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.ஏழுமலை வெங்கடேஸ்வரா நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.ஆறுமுகம் வாழ்த்தி பேசினார்கள் 5-ம் வகுப்பு மாணவி ஆர்த்தி நன்றி கூறினார்.
No comments