Disqus Shortname

உத்தரமேரூரில் அ.தி.மு.க இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா

உத்தரமேரூர் மார்ச்,27

உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் புதன்கிழமையன்று அ.தி.மு.க சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. உத்தரமேரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் ஆர் கமலக்கண்ணன், துணைத்தலைவர்  அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். பேரூர் கழக செயலாளர் கே.லட்சுமணன் வரவேற்றார். உத்தரமேரூர் சட்ட பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் இலவச நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு மோர் வழங்கி சிறப்புரையாற்றினார். இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலர் த.சந்திரமெளலி  தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர்  கே.தயாளன் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு டைல்ஸ் எஸ்.சேகர், மாவட்ட குழு உறுப்பனர் சுமதி குணசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர். களியாம்பூண்டி, தங்க.பஞ்சாட்சரம், மானாம்பதி பி.வில்வபதி, மாவட்ட குழு உறுப்பனர் சுமதி குணசீலன், பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன், திருப்புலிவனம் ஒன்றிய குழு உறுப்பினர் கார்வண்ணன், அ,பி,சத்திரம் பெருமாள், மேனலுார் ஊராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.பெருமாள், எம்.கே.பி.வேலு சர்தார்பாய், என்.எஸ்.மணி எம்.பி.லட்சா  உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கழக செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான காஞ்சி பன்னீர்செல்வம் இலவச மோர் வழங்கியும் , பொதுமக்களுக்கு இளநீர், மற்றும் தர்பீஸ் பழங்கள் வழங்கினார். கே.கெங்காதரன் நன்றி கூறினார்

No comments