Disqus Shortname

புதுவாழ்வு திட்டத்தில் கணினி பயிற்சி

 உத்தரமேரூர் மார்ச்-22
உத்தரமேரூர் தாலுக்கா, திருப்புலிவனம் பகுதிக்குட்பட்ட 12 ஊராட்சிகளில்
உலக வங்கி உதவியுடன் செயல்பட்டு வரும் புதுவாழ்வு திட்டத்தில் கிராம
வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் மகளிர் குழு கூட்டமைப்பை சார்ந்த 60
உறுப்பினர்களுக்கு கணினி பயிற்சி வியாழக்கிழமையன்று துவங்கியது.
இப்பயிற்சியை உதவி திட்ட மேலாளர்கள் சுபான், தில்லைநாயகம் முன்னிலை
வகித்தனர்.  திருப்புலிவனம் ஊராட்சி மன்றத்தலைவர் சரளா பிரகாஷ்பாபு தலைமை
தாங்கினார்.  திருப்புலிவனம் பகுதி அணித் தலைவர் ஜெ.மணிகண்டன்
வரவேற்புரையாற்றினார்.  மாவட்ட திட்ட மேலாளர் எஸ்.கழுகாசலமூர்த்தி
பயிற்சியை துவக்கிவைத்து பேசினார். இப்பயிற்சி துவக்கப்பட்டு 15
நாட்களுக்கு மட்டும் மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் மக்கள் கற்றல்
மையத்துடன் இணைந்து செயல்படும்.

No comments