உத்தரமேரூரில் சாலை மறியல் செய்த தி.மு.க.வினர் கைது
உத்தரமேரூர் மார்ச் 12,
உத்தரமேரூர்
பேரூந்து நிலையத்தில் திங்கட்கிழமையன்று சாலை மறியலில் ஈடுபட்ட
தி.மு.க.வினர் 100க்கும் மேற்பட்டடோர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட அவைத்
தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.யுமான க.சுந்தர் தலைமையில் தி.மு.க ஒன்றிய கழக
செயலாளர் இரா.நாகன், மாவட்டவிவசாய அணி தலைவர் சோழனுார் மா.ஏழுமலை,
பொதுக்குழு உறுப்பினர் கெ.ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய
செயலாளர் இராபர்ட் மல்லிமாறன் ஆகியோர் முன்னிலையில் ராஜபக்சே மீது போர்
குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெசோ அமைப்பினர் நடத்தும் பொது வேலை
நிறுத்தத்தின் காரணமாக உத்தரமேரூர்ல் தி.மு.க வினர் சாலை மறியலில்
ஈடுபட்டனர். இராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டனர். தி.மு.க.வை சேர்ந்த
கு.துரைவேல், த.விநாயனகம், பேரூர் செயலாளர்
என்.எஸ்.பாரிவள்ளல், பேரூராட்சி மன்றத்தலைவர் கு.சுமதி குணசேகரன்,
டி.குமார் பெ.மணி. ஆ.சுந்தர் உட்பட 100க்கும் மேற்பட்டோரை உத்தரமேரூர்
காவல் துறையினர் கைது செய்துனர்.
No comments