Disqus Shortname

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா

உத்தரமேரூர் மார்ச்-8 
உத்தரமேரூர் மீனாட்சியம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் 7 நாட்கள் திருப்புலிவனத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா வியாழக்கிழமையன்று நடந்தது.  திட்ட அலுவலர் இரா.தனசேகரன் வரவேற்றார்.  கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுப.நடராஜன் தலைமை தாங்கினார்.  திருப்புலிவனம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சி.ரவி, ஓய்வுப்பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஆ.தெய்வசிகாமணி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.  இம்முகாமில் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீஅமிர்தகுஜாம்பால் கோயில்களை சுத்தம் செய்தனர்.  கிளை நூலகம், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி சுற்றியும், அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களை நாட்டுநிலப்பணித்திட்ட மாணவ மாணவியர் தூய்மை படுத்தினர்.  மேலும், எய்ட்ஸ் விழிப்புணர்வு, இரத்ததானத்தின் நன்மை, காசநோய் அறிகுறி, மரக்கன்றுகள் நடுதல் போன்ற செயல்பாடுகள்பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர். கணினி பயன்பாட்டுத்துறைத் தலைவர் கோ.இராஜ்குமார் நன்றி கூறினார்.

No comments