Disqus Shortname

உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம்

உத்திரமேரூர்  ஜன, 08:
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 32 இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., (பொறுப்பு) தமிழ்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசு துறைகளில் தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணியாற்றி வருபவர்களை, பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 32 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்ய, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., (பொறுப்பு) தமிழ்ச்சந்திரன் உத்தரவிட்டார். மாறுதல் செய்யப்பட்டுள்ளவர்கள் அந்தந்த இடங்களில் விரைவில் சென்று பொறுப்பேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதன்படி உத்திரமேரூரில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்  ஜெ.மணிமாறன் அவர்கள்  திருவள்ளூர் தாலுக்காவிற்கு  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.  அதே போல் ஆர்.கே.பேட்டையில் பணியாற்றிய   இன்ஸ்பெக்டர்   பி.ரமேஷ்- உத்திரமேரூர்  தாலுக்காவிற்கு  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.

No comments