Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றிய பேரூர் திமுக பொதுக்கூட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய பேரூர் திமுக சார்பில் நான்கே முக்கால் ஆண்டு துருப்பிடித்து கிடக்கும் அதிமுக அரசின் அவலங்களை விளக்கும் பொதுக்கூட்டம் உத்திரமேரூர் பஜார் வீதியில் நேற்று மாலை நடந்தது. உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன், பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல், ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் ஸ்டாலின், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் ஆகியோர், ஜெயலலிதா அரசின் அவலங்களையும், மக்கள் விரோத போக்கினையும், விலைவாசி உயர்வு, மழை நிவாரண நிதி முறையாக கொடுக்காதது குறித்தும் விளக்கி பேசினர். கூட்டத்தில் நிர்வாகிகள் காளிதாஸ், ரமேஷ்பாபு, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments