Disqus Shortname

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு கடன் வழங்க விண்ணப்ப மனு

உத்திரமேரூா் ஜன 25.
 காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூா் பேரூந்து நிலையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் மனு அளிக்கும் விழா நடைபெற்றது பொ.சசிக்குமார் வரவேற்றார். காஞ்சி மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஆா்.ஜே.அதியமான் முன்னிலை வகித்தார் உத்தரமேரூா் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு தமிழக அரசு முதல்வா் உத்தரவின் பேரில் வட்டியில்லா 5 ஆயிரத்திற்க்கு உண்டான கடன் விண்ணப்ப மனு அளித்து பேசியது 5 ஆயிரம் பெற்ற பிறகு வாரந்தோறும் ரூ 200 வங்கியில் செலுத்த வேண்டும் 11 சதவீத வட்டி அரசு வழங்கிவிடும் தவனை தேதியில் கடனை செலுத்தினால் அதே கடனை தொடந்து 4 சதவீதம் வட்டியில் பெறலாம் இம்முகாம் 10 நாட்கள் நடைபெறும் வங்கியில் விண்ணப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம் என்றார் எம்.எல்.ஏ இவ்வங்கியின் சேர்மென் இ.கிருஷ்ணமூர்த்தி பேசினார் ஒன்றியக்குழு துணைத்தலைவா் அ.ரவிசங்கர் ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு புலியூா் பழனி, அ.பி.சத்திரம் கோ.பொருமாள் கே.சி.எம்.விஜய், மு.துரைபாபு குண்ணவாக்கம் ஆா்.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலா் பங்கேற்றனா் முடிவில் கவுன்சிலா் சா்தார்பாய் நன்றி கூறினார்.

No comments