பொங்கல் பரிசு வழங்கும் விழா
உத்திரமேரூா் ஜன 09.
தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்புகளை எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கிவைத்தர். தமிழக அரசு பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேஷன்கடைகளில் அரிசி, சர்க்கரை, கரும்பு, மற்றும் ரூ .100 ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகிறது ..
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூா் பேருந்து நிலையத்தின் பொங்கல் பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது 2 வார்டுகளில் 160 பயனாளிக்கு அரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ ரொக்கம் ரூ 100 யுடன் கரும்பினை காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி பரிசு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கிவைத்தனர்.. கூட்டுறவு பண்டகசாலை செயலாளா் ஆராவமுதன் வரவேற்றார். ஒன்றியக்குழுத் தலைவர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளா்கள் வி.ஆா்.அண்ணாமலை கே.பிரகாஷ்பாபு கூட்டுறவு சங்க தலைவர் லச்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா், நிகழ்ச்சியில் ஸ்ரீ பெரும்புதூா் எம்.எல்.ஏ. மொளச்சூா் பெருமாள், ஏ.ராஜாமணி, பொ.சசிக்குமார், ஜெயவிஷ்ணு, கே.சி.எம்.விஜய், மு.துரைபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments