போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை, கைது செய்தனர்.
உத்திரமேரூர்: ஜன,
08-
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள்,
பழையசீவரத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு வழங்கி வருகின்றனர்.
ஆனால், கரும்புக்கான கூலி, தரமான விதைகள் விநியோகம், சரியான நேரத்தில்
அறுவடை போன்றவற்றை தனியார் கரும் பாலை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என
விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதனால், மதுராந்தகம் வட்டம் படாளத்தில் செயல்படும் கூட்டுறவு சர்க்கரை
ஆலையில் கரும்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என உத்திரமேரூர் கரும்பு
விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, உத்திரமேரூர் வட்ட கரும்பு விவசாயிகள்
உத்திரமேரூர் - வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு
விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் எஸ்.ஜனார்த்தனன் தலைமையில் நடந்த
இப்போராட்டத்தில், 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
No comments