Disqus Shortname

உத்திரமேரூரில் ஜெயலலிதா போட்டியிட விருப்ப மனு

சென்னை, ஜன. 22-தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது.

 சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தினமும் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து மனு கொடுத்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர், ஆயிரம் விளக்கு ஆகிய 11 தொகுதிகளில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிட வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.இ. அ.தி.மு.க. பிரதிநிதி முத்யால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் மனு கொடுத்தார்.
ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ .11,000 கட்டணம் வீதம் 11 தொகுதிகளுக்கும் ரூ .1 லட்சத்து 11 ஆயிரம் செலுத்தி முத்யால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் இந்த மனுக்களை அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகளிடம் கொடுத்தார்.

No comments