மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
உத்திரமேரூர் ஞாயிறு, ஜனவரி 17,2016,
திருவண்ணாமலை மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 20). அதே ஊரை சேர்ந்தவர் ஜெகன் (23). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சென்று விட்டு மீண்டும் ஆலத்தூருக்கு சென்றனர். பென்னலூர் அருகே செல்லும்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே இறந்தார்.ஜெகன் லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 20). அதே ஊரை சேர்ந்தவர் ஜெகன் (23). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சென்று விட்டு மீண்டும் ஆலத்தூருக்கு சென்றனர். பென்னலூர் அருகே செல்லும்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே இறந்தார்.ஜெகன் லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments