Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பரபரப்பு: அம்மன் வடிவில் கரையான் புற்று மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு

உத்திரமேரூர்ஜன.6–:
 உத்திரமேரூர் அருகே அம்மன் வடிவில் உருவான கரையான் புற்றால் பரபரப்பு ஏற்பட்டது. மஞ்சள், குங்குமம் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவரது வீட்டின் பின்புறம் திடீரென கரையான் புற்று உருவானது. இதை பார்த்ததும், தண்ணீர் ஊற்றி கரையான் புற்றை கருணாகரன் அழித்தார். சில தினங்களில் மீண்டும் கரையான் புற்று உருவாக, இந்த முறை மண்எண்ணெய் ஊற்றி அழித்தார் கருணாகரன். அதற்கு பிறகும் கரையான் புற்று உருவாவது நின்றபாடில்லை. மீண்டும் அதே இடத்தில் உருவானது. சமீபத்திய மழையில்கூட அந்த புற்று அப்படியே உள்ளது.அம்மன் வடியில் தத்ரூபமாக அந்த கரையான் புற்று இருந்தது. இதை கேள்விபட்டதும் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வந்து பார்த்து  செல்கின்றனர். பலர், அந்த அம்மன் வடிவிலான புற்றுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட ஆரம்பித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments