Disqus Shortname

வெள்ளாடுகள் வழங்கும் விழா

உத்திரமேரூா் ஜன 12.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூா் ஒன்றியத்திற்குட்பட்ட திருப்புலிவனம், திணையாம்பூண்டி உட்பட 7 கிராமங்களில் நேற்று வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது ஒன்றிய குழுத் தலைவா் ஆலஞ்சேரி இரா.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ்பாபு, வி.ஆா்.அண்ணாமலை ஒன்றியக்குழு துணைத்தலைவா் அ.ரவிசங்கா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக்குழு உறுப்பினார் கார்வண்ணன் வரவேற்றார் காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு 265 விலையில்லா வெள்ளாடுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் தங்கபஞ்சாட்சரம், சசிகுமார், என்.எம்.வரதராஜீலு, உட்பட நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்

No comments