உத்திரமேரூரில் இருளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
உத்திரமேரூர் ஜன,
09:
இருளர் மக்களுக்கு பாரபட்சமின்றி வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நேற்று உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
இருளர் மக்களுக்கு பாரபட்சமின்றி வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நேற்று உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
பொது செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் அழகேசன், உத்திரமேரூர் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தனர்.
அண்மையில் பெய்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட உத்திரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட பழங்குடியின மக்கள் அனைவருக்கும் அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை வழங்க வேண்டும்.
அண்மையில் பெய்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட உத்திரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட பழங்குடியின மக்கள் அனைவருக்கும் அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை வழங்க வேண்டும்.
வீடுகளை இழந்த மக்களுக்கு பசுமை வீடு திட்டத்தில் தரமான வீடு கட்டி தர வேண்டும். அரசு அறிவித்த ரூ.
5000 நிவாரண உதவி தொகையை உயர்த்தி தர வேண்டும். குடும்ப அட்டை இல்லாமல்
இருக்கும் இருளர் குடும்பத்துக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும் என பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
முடிவில், வட்டாட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
No comments