கல் குவாரிகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்
உத்திரமேரூர்Jan 20, 2016 :
உத்திரமேரூர் ஒன்றியத்தில், விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் கல் குவாரிகளை மூட வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் இயக்கம் சார்பில், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவேரி, சிறுதாமூர், மதுார், ஆனம்பாக்கம், சிறுமையிலுார், பினாயூர், பொற்பந்தல், குண்ணவாக்கம் போன்ற பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கும் தனியார் கல் குவாரிகளை இயக்காமல் நிறுத்தம் செய்ய வேண்டும்.இக்குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி ஆணைகள் குறித்து விசாரணை நடத்திட வேண்டும். குவாரி என்ற பெயரால் விவசாய நீர்நிலைகளை துார்த்து இயற்கை வளங்களை கொள்ளையடிப்போர் மீதும், அதற்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல் குவாரிகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநிலக்குழு உறுப்பினர் ஆ.மோகன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
உத்திரமேரூர் ஒன்றியத்தில், விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் கல் குவாரிகளை மூட வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் இயக்கம் சார்பில், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவேரி, சிறுதாமூர், மதுார், ஆனம்பாக்கம், சிறுமையிலுார், பினாயூர், பொற்பந்தல், குண்ணவாக்கம் போன்ற பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கும் தனியார் கல் குவாரிகளை இயக்காமல் நிறுத்தம் செய்ய வேண்டும்.இக்குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி ஆணைகள் குறித்து விசாரணை நடத்திட வேண்டும். குவாரி என்ற பெயரால் விவசாய நீர்நிலைகளை துார்த்து இயற்கை வளங்களை கொள்ளையடிப்போர் மீதும், அதற்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல் குவாரிகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநிலக்குழு உறுப்பினர் ஆ.மோகன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
No comments