உத்தரமேரூரில் புத்தாண்டு விழா ஸ்ரீ ஹனுமன் ஜேயந்தி விழா
உத்தரமேரூர் ஜன,01
உத்தரமேரூரில் புதன்கிழமையன்று ஆங்கில புத்தாண்டு விழாவும்,ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி விழாவும் ஸ்ரீ ஆனந்தவல்லி நாயக சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பாக நடந்தது. மாலையில் சிறப்பு திருமஞ்சனம் (அபிஷேகம்) முடிந்தபின் வீர ஆஞ்சநேயருக்கு மார்கழி மாத சிறப்பு பூஜையும் வடை மாலையும் சார்த்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று ஜெய் ஸ்ரீராம் என்று கூறியபடி வீர ஆஞ்சநேயரை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஆர்.சேஷாத்திரி செய்திருந்தார். பக்தர்களுக்கு சக்கரை பொங்கல், தயிர்சாதம் பொங்கல் வழங்கினார்கள். வியாழக்கிழமையன்று வீர ஆஞ்நேயருக்கு அளிக்கப்பட்ட வெண்ணை காப்பு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
உத்தரமேரூரில் புதன்கிழமையன்று ஆங்கில புத்தாண்டு விழாவும்,ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி விழாவும் ஸ்ரீ ஆனந்தவல்லி நாயக சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பாக நடந்தது. மாலையில் சிறப்பு திருமஞ்சனம் (அபிஷேகம்) முடிந்தபின் வீர ஆஞ்சநேயருக்கு மார்கழி மாத சிறப்பு பூஜையும் வடை மாலையும் சார்த்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று ஜெய் ஸ்ரீராம் என்று கூறியபடி வீர ஆஞ்சநேயரை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஆர்.சேஷாத்திரி செய்திருந்தார். பக்தர்களுக்கு சக்கரை பொங்கல், தயிர்சாதம் பொங்கல் வழங்கினார்கள். வியாழக்கிழமையன்று வீர ஆஞ்நேயருக்கு அளிக்கப்பட்ட வெண்ணை காப்பு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
No comments