Disqus Shortname

பெருங்கோழி கிராம சபா கூட்டம் சட்ட உதவி முகாம்

உத்தரமேரூர் ஜன,26
 உத்தரமேரூரை அடுத்த பெருங்கோழி கிராமத்தில் கிராம சபா கூட்டத்தில்  உத்தரமேரூர் வட்ட சட்ட பணிகள் குழு, நடத்தும் சட்ட உதவி முகாமும் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி முருகன்,  துணைத்தலைவர் எல்லப்பன்  தலைமை தாங்கினார்கள். உத்தரமேரூர் மாவட்ட  உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதி மன்ற நீதிபதி எம்.ஜெய்சங்கர்,    முன்னிலை வகித்தார் வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் கே.இராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கட்டியாம்பந்தல் கூட்ரோட்டில் உள்ள மதுபானக்கடையை அகற்றுதல், பெருங்கோழி கிராமத்தில் ஏரிக்கால்வாய்களை துார் வாருதல், சிறுங்கோழி கிராமத்தில் காட்டேரி பகுதியில் ஏரி நீர்நிலைகளில் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளை அகற்றவும், பெருங்கோழி கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொது மக்கள் தங்கள் கோரிக்கையை மனுக்கள்  மூலமாக நீதிபதியிடம்  வழங்கினார்கள்.

No comments