நிலத்தகராறு மாமனார் மருமகளுக்கு சரமாரி அடி 3பேர் கைது
உத்தரமேரூர் ஜன,10
உத்திரமேரூர் அடுத்த வளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது அண்ணன் மகன் டில்லியப்பன். மனைவி சுலோச்சனா (43). அதே பகுதியை சேர்ந்தவர்கள் தேவேந்திரன் (40), ஜெயராமன் (39), பாலாஜி (35). இவர்களுக்கும், ராஜமாணிக்கத்துக்கு நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டில்லியப்பன் வீட்டில் ராஜமாணிக்கம் இருந்தார். அப்போது, தேவேந்திரன், ஜெயராமன், பாலாஜி ஆகியோர் சென்று ராஜமாணிக்கத்திடம் தகராறு செய்தனர். இதை சுலோச்சனா தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ராஜமாணிக்கம், சுலோச்சனா ஆகியோரை தாக்கினர். மேலும் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இவர்களது சத்தம்கேட்டு, ஊர் மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரன், உட்பட 3 பேரை கைது செய்தனர்.
உத்திரமேரூர் அடுத்த வளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது அண்ணன் மகன் டில்லியப்பன். மனைவி சுலோச்சனா (43). அதே பகுதியை சேர்ந்தவர்கள் தேவேந்திரன் (40), ஜெயராமன் (39), பாலாஜி (35). இவர்களுக்கும், ராஜமாணிக்கத்துக்கு நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டில்லியப்பன் வீட்டில் ராஜமாணிக்கம் இருந்தார். அப்போது, தேவேந்திரன், ஜெயராமன், பாலாஜி ஆகியோர் சென்று ராஜமாணிக்கத்திடம் தகராறு செய்தனர். இதை சுலோச்சனா தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ராஜமாணிக்கம், சுலோச்சனா ஆகியோரை தாக்கினர். மேலும் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இவர்களது சத்தம்கேட்டு, ஊர் மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரன், உட்பட 3 பேரை கைது செய்தனர்.
No comments