டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
உத்தரமேரூர் ஜன.04,
உத்தரமேரூர் அருகே கட்டியாம்பந்தல் கூட்ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடையின் ஷட்டரில் இருந்த பூட்டை உடைத்து புதன்கிழமை நள்ளிரவு கொள்ளை அடிக்க மர்மநபர்கள் முயற்சித்துள்ளனர்.
உத்தரமேரூர் தாலுக்கா, கட்டியாம்பந்தல் கூட்ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது.இங்கு லோகநாதன்(35) என்பவர் மேற்பார்வையாளராகவும், 2 பேர் விற்பனையாளராகவும் வேலை செய்து வருகின்றனர்.
புதன்கிழமை புத்தாண்டு என்பதால் காலை முதல் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.ரூ.4 லட்சத்துக்கு மேல் வியாபாரம் ஆனதாக கூறப்படுகிறது. இரவு பத்து மணிக்கு வியாபாரம் முடித்து லோகநாதன் மற்றும் ஊழியர்கள் கடையைப் பூட்டி விட்டுச் சென்றனர்.
வியாழக்கிழமை காலை வழக்கம் போல் கடையைத் திறக்க வந்த போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது ரூ.280 மதிப்புள்ள முழு பிராந்தி பாட்டிலை மர்ம நபர்கள் எடுத்து குடித்துவிட்டு காலி பாட்டிலை போட்டு விட்டு சென்றுள்ளனர். புதன்கிழமை விற்பனையான பணத்தை லோகநாதன் வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார்.அதனால் விற்பனை பணம் தப்பிற்று.
இது குறித்து உத்தரமேரூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
உத்தரமேரூர் அருகே கட்டியாம்பந்தல் கூட்ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடையின் ஷட்டரில் இருந்த பூட்டை உடைத்து புதன்கிழமை நள்ளிரவு கொள்ளை அடிக்க மர்மநபர்கள் முயற்சித்துள்ளனர்.
உத்தரமேரூர் தாலுக்கா, கட்டியாம்பந்தல் கூட்ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது.இங்கு லோகநாதன்(35) என்பவர் மேற்பார்வையாளராகவும், 2 பேர் விற்பனையாளராகவும் வேலை செய்து வருகின்றனர்.
புதன்கிழமை புத்தாண்டு என்பதால் காலை முதல் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.ரூ.4 லட்சத்துக்கு மேல் வியாபாரம் ஆனதாக கூறப்படுகிறது. இரவு பத்து மணிக்கு வியாபாரம் முடித்து லோகநாதன் மற்றும் ஊழியர்கள் கடையைப் பூட்டி விட்டுச் சென்றனர்.
வியாழக்கிழமை காலை வழக்கம் போல் கடையைத் திறக்க வந்த போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது ரூ.280 மதிப்புள்ள முழு பிராந்தி பாட்டிலை மர்ம நபர்கள் எடுத்து குடித்துவிட்டு காலி பாட்டிலை போட்டு விட்டு சென்றுள்ளனர். புதன்கிழமை விற்பனையான பணத்தை லோகநாதன் வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார்.அதனால் விற்பனை பணம் தப்பிற்று.
இது குறித்து உத்தரமேரூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
Reviewed by Uhiramerur News.Com Admin
on
January 04, 2014
Rating: 5
No comments