Disqus Shortname

உத்தரமேரூரில் தி.மு.க விவசாய அணி சமத்துவ பொங்கல் விழா

உத்தரமேரூர் ஜன,13
காஞ்சி மாவட்ட தி.மு.க விவசாய அணி சார்பில் திங்கட்கிழமையன்று ஸ்ரீ சுந்தரவரதராஜப்பெருமாள் கோவில் அருகே தமிழ்ப்புத்தாண்டு  மற்றும்  சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனுார் மா.ஏழுமலை, தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் இரா.நாகன் வரவேற்றார். தலைமை பொதுக்குழு உறுப்பினர்  கெ.ஞானசேகரன் பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல் ஒன்றிய விவசாய அமைப்பாளர் கோ.தவனகிரி,  பேரூராட்சி மன்ற தலைவர்  சுமதி குணசேகரன் முன்னிலை வகித்தனர். காஞ்சி மாவட்ட செலாளர் தா.மோ.அன்பரசன் சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றி  200 பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை, அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார். காஞ்சீ தொண்டை மண்டல ஆதீனம் சீலத்திடு திருவம்பல தேசிய ஞானபிரகாச சுவாமிகள், மாவட்ட கழக அவைத்தலைவர்  க.சுந்தர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரான்ஸ்சிஸ் மங்காஸ்டர் மாஹரி மக்டொனால்டு தமிழில் நன்றி தெரிவித்து பேசினார்.  கிருஸ்துவ மக்கள்  நல்லெண்ண இயக்கம் எஸ்.இனினோ இருதயராஜ், டாக்டர் கே.பரமசிவம், ஜெயின் சங்க செயலாளர் பி.பாரஸ்மல்ஜெயின், முத்தவள்ளி பள்ளிவாசல் எஸ்.ஜெஹாங்கீர் வாழ்த்தி  பேசினார்கள்,  சிறுவன் சிலம்பாட்டம், பரதநாட்டியம் சிறப்பாக நடந்தது. பொங்கல் விழா முன்னாள் சேர்மென் கு.துரைவேலு எஸ்.ஆர்.அப்பாதுரை, சின்னாலம்பாடி என்.ரவி, .டி.கே.கோபாலகிருஷ்ணன், ஏ.கே.ரமேஷ்பாபு, நா.உதயசூரியன், இரா.மணி, லோ.வரகுணபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர் பேரூர் விவசாய அணி அமைப்பாளர் தா.சுப்பராயன் நன்றி கூறினார்

No comments