இருசக்கர வாகனத்துடன் எரிந்த நிலையில் வாலிபர் சடலம்
உத்தரமேரூர் ஜன16
உத்தரமேரூர் தாலுக்கா விசூர் ஏரிக்கரை விவசாய நிலம் அருகே புதன்கிழமையன்று இருசக்கர வாகனத்துடன் எரிந்த நிலையில் வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உத்தரமேரூர் தாலுக்கா விசூர் ஏரிக்கரை விவசாய நிலம் அருகே விவசாயி நிழலுக்காக அமைத்துள்ள கொட்டகை எரிந்து கொண்டிருந்தது. அருகே இருந்த கிராம மக்கள் பக்கத்தில் சென்று பார்த்த போது இருசக்கர வாகனத்துடன் எரிந்த நிலையில் ஆண்
சடலம் இருப்பதை கண்ட பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெருநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரித்ததில் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமம் பாட சாலை தெருவில் வசிக்கும் பிச்சாண்டி (40) தையல் கடை நடத்திவருவதும் மனைவி கவிதா(35) மூன்று மகள்கள் ரம்யா(14) சுமித்ரா(12) மோகனப்பிரியா(10) விசாரணையில் தெரிய வந்தது. காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரமேரூர் தாலுக்கா விசூர் ஏரிக்கரை விவசாய நிலம் அருகே புதன்கிழமையன்று இருசக்கர வாகனத்துடன் எரிந்த நிலையில் வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உத்தரமேரூர் தாலுக்கா விசூர் ஏரிக்கரை விவசாய நிலம் அருகே விவசாயி நிழலுக்காக அமைத்துள்ள கொட்டகை எரிந்து கொண்டிருந்தது. அருகே இருந்த கிராம மக்கள் பக்கத்தில் சென்று பார்த்த போது இருசக்கர வாகனத்துடன் எரிந்த நிலையில் ஆண்
சடலம் இருப்பதை கண்ட பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெருநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரித்ததில் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமம் பாட சாலை தெருவில் வசிக்கும் பிச்சாண்டி (40) தையல் கடை நடத்திவருவதும் மனைவி கவிதா(35) மூன்று மகள்கள் ரம்யா(14) சுமித்ரா(12) மோகனப்பிரியா(10) விசாரணையில் தெரிய வந்தது. காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments