Disqus Shortname

தே.மு.தி.க சார்பில் ஆலோசனை கூட்டம்

உத்தரமேரூர் ஜன 19
உத்தரமேரூரில் காஞ்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க சார்பில் ஆலோசனை  கூட்டம் சனிக்கிழமையன்று நடைபெற்றது காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.இரமேஷ்பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் வி.பி,ஜான் முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் ஒன்றிய கழக செயலாளர் அழிசூர் வி,கன்னியப்பன் வரவேற்றார். செங்கல்பட்டு எம்.எல்.ஏ அனகை டி.முருகேசன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பிப்ரவரி 2ம் தேதி உளுந்துார்பேட்டையில் நடைபெற உள்ள தே.மு.தி.க மாநாட்டில் காஞ்சி மாவட்டத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள்  கலந்து கொள்ள வேண்டும். இம்மாநாடு இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். கொடி, தோரணங்கள், சுவர், விளம்பரங்கள், பேனர்கள், அனைத்து முக்கிய இடங்களிளும் அமைக்கபட வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் யாரை கேப்டன் அறிவிக்கிறாரோ அவரை அதிகவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும். இம்மாநாட்டில் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தங்களது குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

No comments