திருப்புலிவனத்தில் கழக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
உத்தரமேரூர்
கிழக்கு ஒன்றியம் திருப்புலிவனத்தில் கழகப்பொதுக்குழு தீர்மான விளக்க
பொதுக்கூட்டம் நடந்தது. கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு தலைமை
தாங்கினார். காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர்
எம்.எல்.ஏ.வுமான வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார்.
ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர்
வரவேற்றனர். தலைமைக்கழக பேச்சாளர் இடிமுரசுஇரவி கழக பொதுக்குழு
தீர்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றினார். காஞ்சி சட்ட மன்ற உறுப்பினர்
வி.சோமசுந்தரம், காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்
எம்.கார்வண்ணன், டி.எம்.சடையாண்டி, தொகுதி செயலாளர் கே..ஆர்.தருமன்,
ஊராட்சி மன்றத்தலைவர் பி.சரளா பிரகாஷ்பாபு, ஒன்றிய எம்.ஜீ.ஆர்.மன்ற
செயலாளர் டி.தணிகைவேல், வடாதாவூர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஐ.சதீஷ் உட்பட
பலர் கலந்து கொண்டனர். கிளை கழக செயலாளர் டி.சி.கிருஷ்ணன் நன்றி
கூறினார்.
No comments