தமிழ்நாடு உதவி வேளாண்மை சங்க மாவடட் பொதுக்குழு கூட்டம்.
உத்தரமேரூர்
தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டில்
உள்ள அமிர்த மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் இரா.அங்கமுத்து தலைமை
தாங்கினார். மாவட்ட துணை தலைவர் வி.நாகராஜன் மாவட்ட இணைச்செயலாளர் இரா.ரமேஷ் முன்னிலை
வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஜெ.திருமூர்த்தி வரவேற்றார். மாநிலத்தலைவர் ச.இசக்திமுத்து
விழாவில் கலந்து கொண்டு சங்க நடவடிக்கைகள் குறித்தும், புதியதாக தேர்வு செய்யப்பட்ட
மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டும் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்க்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலியாக உள்ள உதவி வேளாண்மை அலுவர்களை நியமணம் அரசு செய்ய வேண்டும் எதிர் கால திட்டங்கள்
குறித்து விவாதிக்கப்பட்டது. மகளிர் மாவட்ட செயலாளராக கிருஷ்ணதேவி ஸ்ரீ பெரும்புதுார்
ஒன்றிய செயலாளர் எஸ்.நாகராஜன் உதவி விதை அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பொதுச்செயலாளர்
துரைஅருளானந்தம் மாநில பொருளாளர் பா.முத்து மகளிரணி செயலாளர் எம்.என்.ஷர்மிளா கடலுார்.
விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார் மாவட்ட தலைவர்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் பெ.துரை நன்றி கூறினார்.
No comments