பெருங்கோழியில் 486 மின்விசிறி மிக்சி கிரைண்டர் வழங்கும் விழா
உத்திரமேரூர்
அடுத்த பெருங்கோழி கிராமத்தில் நேற்று விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும்
விழா நடைப்பெற்றது- விழாவில் வட்டாட்சியர் பேபிஇந்திரா அனைவரையும் வரவேற்றார். ஒன்றியக்குழு
தலைவர் இரா.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை,
கே.பிரகாஷ்பாபு, முன்னிலை வகித்தனர். காஞ்சி மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம், உத்திரமேரூர்
தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத்பா.கணேசன் ஆகியோர் தலைமை தாங்கி 486 பயனாளிகளுக்கு
மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்கள் வழங்கினார்கள். விழாவில் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி
அ.பி.சத்திரம் கே.பெருமாள், பி.வில்வபதி, பொ.சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்
No comments