பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
உத்திரமேரூர் மார்ச்,16
உத்திரமேரூர் பாலர்நேசன்
நடுநிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சி இணைந்து பன்றிக்காய்ச்சல்
விழிப்புணர்வு முகாம் நேற்று நடத்தியது. அரசு ஆரம்பசுகாதர அலுவலர் டாக்டர்.கேசவன் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வை
பற்றி விளக்கி பேசினார். பாலர் நேசன் பள்ளி நிர்வாகி த.புஷ்பராஜ் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் கிறிஷ்டினாள்ஜெபமேரி வரவேற்றார்.
அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சந்திரன் பன்றிகாய்ச்சல் பற்றிய தகவல்களை மாணவ-மாணவியர்களிடம்
உரையாற்றினார். சுகாதார ஆய்வாளர் அம்பிகாபதி கைகழுவும் முறையை மாணவர்களுக்கு செய்து
காட்டி பின்பு மாணவ-மாணவியர்களுக்கு செய்முறை கூறினார். கைகழுவும்முறையை மாணவர்கள்
செய்து காட்டினார்கள். செய்து காட்டினார்கள். லில்லிமேரிபுஷ்பராஜ் ஓய்வுநாள் பாடசாலை
ஆசிரியர் நன்றி கூறினார் இம்முகாமில் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள்
அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments