Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மரத்தின் மீது லாரி மோதி டிரைவர் பலி

உத்திரமேரூர் மார்ச்26,:
உத்திரமேரூர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி, சாலையோர மரத்தில் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.  நேற்று நள்ளிரவு  எண்ணூரில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு  லாரி ஒன்று உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்துக்குபுறப்பட்டது. உத்திரமேரூர் அடுத்த மன்னன்குடிசை கிராமத்தை சேர்ந்த மோகன் (23) என்பவர், லாரியை ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரி தாறுமாறாக ஓடியது.
இதனால் வலதுபுறத்தில் சாலையோர  புளியன் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது .இதில் மோகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments