Disqus Shortname

உத்திரமேரூரில் டெங்கு, பன்றிகாய்ச்சல் குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் விழா

உத்திரமேரூர் மார், 03

உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மற்றும்
பன்றிகாய்ச்சல் போன்றவை வருவதற்கான அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்
குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.
துண்டுபிரசுரத்தில் கொசுக்களினால் ஏற்படும் பாதிப்புகள் டெங்கு,
சிக்குன்குனியா, பன்றிகாய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் அதன்பின்
மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து
துண்டுப்பிரசுரத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சுகாதார
மருததுவர்கள் பேரூந்து நிலையத்தில் உள்ள பொது மக்களில் 84 பேருக்கு
பரிசோதனை செய்தனர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி தலைமை
தாங்கினார். உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிகுணசேகரன், துணை
தலைவர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார
மேற்பார்வையாளர் தாமரைசெல்வன் அனைவரையும் வரவேற்றார். உத்திரமேரூர்
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும்
சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

No comments