Disqus Shortname

லேப்டாப் திருடிய வாலிபர் இருவர் கைது

உத்திரமேரூர் மார், 02:
சாலவாக்கம் அருகே, மடிக்கணினி திருடிய, 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.சாலவாக்கம் அடுத்த, கருணாகரச்சேரியைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 33. இவர், சாலவாக்கம் கூட்டுச்சாலை அருகே, சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு அலுவலகம் நடத்தி வருகிறார்.கடந்த 26ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, அலுவலகத்தை பூட்டிக் கொண்டு, வீட்டுக்கு சென்றிருந்தார். இரவு 7:00 மணிக்கு, மீண்டும் அலுவலகத்தை திறக்க, டில்லி பாபு வந்தார். அப்போது, அலுவலகத்தில் வைத்திருந்த மடிக்கணினி மாயமானது தெரிய வந்தது.இது குறித்து, கடந்த 27ம் தேதி, போலீசில் டில்லிபாபு புகார் அளித்தார். இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக், 25, சந்தோஷ், 20, ஆகிய இருவரை கைது செய்தனர்.

No comments