Disqus Shortname

உத்திரமேரூர் பேரூர் திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம்

உத்திரமேரூர் மார், 08
உத்திரமேரூர் பேரூர் திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா
பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் பஜார் வீதியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் பாரிவள்ளல் தலைமை தாங்கினார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் அன்று உத்திரமேரூர் அரசு மருததுவமனையில் பிறந்த சிறுங்கோழியை சேர்ந்த கண்ணன்-கீதா குழந்தைக்கும் மற்றும் புத்தளியை சேர்ந்த வேதநாயகன்-ரமணி குழுந்தைக்கும் தங்க மோதிரம் அணிவித்து 2 குழந்தைகளுக்கும் ஸ்டாலின் என பெயர் சூட்டினார்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சேழனூர்மா.ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், இளைஞரணி அமைப்பாளர் மணி பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிகுணசேகரன் உட்பட
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments