நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
உத்திரமேரூர் மார்ச்,06
உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியம் சாலாவாக்கத்தில் நேற்று அ.இ.அ.தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழா நடைபெற்றது. மக்கள் முதல்வரும் அ.இ.அ.தி.மு.க நிரந்தர பொதுச்செயலாளருமான
ஜெயலலிதா 67-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சாலவாக்கம் அம்மா பேரவை சார்பில் நடைப்பெற்ற
விழாவில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் திருவந்தவார்முருகன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு
தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், வி.ஆர்.அண்ணாமலை முன்னிலை வகித்தனர்.
கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ்பாபு அனைவரையும் வரவேற்றார். அ.தி.மு.க காஞ்சி மேற்கு
மாவட்ட கழக செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத்பா.கணேசன்
கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு தையல்மிஷன்-5, சைக்கிள்-5, அயன்பாக்ஸ்-5, சேலைகள்-500,
தென்னங்கன்று-500 ஆகியவைகளை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து
மக்கள் முதல்வர் அம்மா நீடுழிவாழ சாலவாக்கம் ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேத சொர்ணபுரீஈஸ்வரர்
கோவிலில் 1008 தேங்காய் உடைத்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில்
மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன், ஜி.பெருமாள், தண்டரை தணிகைவேல், வெடி.ஆனந்தன்,
உட்பட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை திருவந்தவார்முருகன் சிறப்பாக
செய்திருந்தார்.
No comments