Disqus Shortname

913 பேருக்கு இலவச மிக்சி கிரைண்டர், மின்விசிறி : எம்எல்ஏ வழங்கினார்

உத்திரமேரூர் :
சிறுபினாயூர், சாத்தணஞ்சேரி ஆகிய ஊராட்சிகளில், அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது.
சாத்தணஞ்சேரி ஊராட்சியில், 543 பயனாளிகளுக்கும்; சிறுபினாயூர் ஊராட்சியில், திருவந்தவார், சிறுபினாயூர், எஸ்.மாம்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 370 பயனாளிகளுக்கும் நேற்று முன்தினம், விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கினார்.
உத்திரமேரூர் வட்டாட்சியர் பேபி இந்திரா மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments