Disqus Shortname

உத்திரமேரூரில் அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்

உத்திரமேரூர் மார்ச், 10

 உத்திரமேரூரில் நேற்று அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்சங்கத்தினர்
காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து அஞ்சலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தினர். இதில் கிராமிய அஞ்சலக ஊழியர்களின் வாழ்வில் ஏற்றம்
கண்டிடவும், மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்களை இலாகா ஊழியர்கள்
ஆக்கிடவும், உச்சநீதிமன்ற பரிந்துறையின் பேரில் தல்வார் கமிட்டி நடைமுறை
படுத்த கோரியும், ஊழியர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்கி இலாகா
ஊழியர்கள் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில் கோட்ட செயலாளர் ஏ.கோபால்
முன்னாள் கோட்ட செயலாளர்கள் ஏ.குப்பன், வி.அசோக்குமார் நிர்வாக
உறுப்பினர் பாஷா மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

No comments