Disqus Shortname

உத்திரமேரூரில் நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சார முகாம்

உத்திரமேரூர் மார்ச்,09

உத்திரமேரூரில் நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சார முகாம் நேற்று
நடைப்பெற்றது. காஞ்சிரம் மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் ஆணக்கிணங்க
நடைபெற்ற இம்முகாமில் உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர்
கி.வரதன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிகுணசேகரன்
துணைத்தலைவர் இ.தயாளன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் டி.ஜி.ரமேஷ்
ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். சங்க பொருளாளர்
க.தனமுத்து அனைவரையும் வரவேற்றார். நுகர்வோர் விழிப்புணர்வு அவசியம்
குறித்த குறும்படங்கள் பொதுமக்களிடையே திரையிடப்பட்டன. சங்க செயலாளர்
கே.ஜெயராமன் உட்பட நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.

No comments