பெருநகரில் தி.மு.க இளைஞர் எழுச்சிநாள் பொதுக்கூட்டம்
உத்திரமேரூர் மார், 13
உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகரில் நேற்று தி.மு.க இளைஞர்
எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கெ.ஞானசேகரன்
தலைமை தாங்கினார். ஊராட்சி அவைத்தலைவர் இரா.முனிரத்தினம் முன்னிலை வகித்தார். ஊராட்சி
செயலாளர் எஸ்.வடிவேலு வரவேற்றார். காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் க.சுந்தர்,
தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தலைமை செயற்குழு
உறுப்பினர் இரா.நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.எழுமலை, சாலவாக்கம்
ஒன்றிய கழக செயலாளர் டி.குமார், உத்திரமேரூர் பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல்,
காக்கநல்லூர் டி.கே.கோபாலகிருஷ்ணன், எ.கே.ரமேஷ்பாபு. உட்பட பலர் பங்கேற்றனர். வார்டு
செயலாளர் ஏ.தினகரன் நன்றி கூறினார்.
No comments