Disqus Shortname

பென்னனூரில் அம்மா திட்ட முகாம்

உத்திரமேரூர் மார், 13

உத்திரமேரூர் அடுத்த பென்னலூர் கிராமத்தில் நேற்று அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.சிவானந்தம் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் வட்டாட்சியர் பேபிஇந்திரா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் வசந்தா அனைவரையும் வரவேற்றார். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 32 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 16 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 9 மனுக்கள் நிலுவையில் உள்ளது. நிகழ்ச்சியில் பூந்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதிராஜேந்திரன், ஊராட்சி செயலர் ராஜ்வார்டு உறுப்பினர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர் முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ரஜினிபாஸ்கர் நன்றி கூறினார்.

No comments