Disqus Shortname

உத்திரமேரூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் மார்,10

உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள்
சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். இதில் உத்திரமேரூர் வட்டத்தில்
வீட்டு மனை இல்லாமல் அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருகும் மக்களுக்கு
குடிமனை பட்டா வழங்கக்கோரியும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்
முதியோர், விதவை, மாற்றுதிறனாளிகளுக்கு நிருத்தப்பட்ட உதவித் தொகையை
மீண்டும் வழங்கவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷமிடப்பட்டது.
ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க வட்ட செயலாளர் வி.கே.பெருமாள்
தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க உறுப்பினர் எட்டியப்பன், நடராஜ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சி.பாஸ்கரன், மாவட்ட நிர்வாகி
சாரங்கன், மாநிலக் குழு கெம்பு, மாவட்ட செயற்குழு சிவகுமார் ஆகியோர்
கண்டன உரையாற்றினார்கள். ஆர்பாட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.

No comments