சாலவாக்கம் பள்ளியில் ஆண்டு விழா
உத்திரமேரூர் பிப் 28
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் எஸ்.ஜெயகாவியம் நர்சரி மற்றும்
பிரைமரி பள்ளியின் 5வது ஆண்டு விழா நேற்று வெகுவிமர்சையாக
கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சாலவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயகுமாரி, பள்ளி நிறுவனர் சுகந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.பள்ளி ஆசிரியை கீதா அனைவரையும் வரவேற்றார். முன்னதாக பள்ளி மாணவ- மாணவியர்களிடையே கட்டுரை போட்டி, கவிதைப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு விருந்தினராக
மதிமுக மாநில துணை பொதுசெயலாளர் மல்லை சி.இ.சத்யா கலந்துக் கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தேவநாத்வெங்கடேசன், ஜான், ஆனந்த், மாஸ்டர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாணவ- மாணவியர்களின் நடனம், நாடகம், போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. முடிவில் பள்ளி ஆசிரியர் ரூபியா நன்றி கூறினார்.
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் எஸ்.ஜெயகாவியம் நர்சரி மற்றும்
பிரைமரி பள்ளியின் 5வது ஆண்டு விழா நேற்று வெகுவிமர்சையாக
கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சாலவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயகுமாரி, பள்ளி நிறுவனர் சுகந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.பள்ளி ஆசிரியை கீதா அனைவரையும் வரவேற்றார். முன்னதாக பள்ளி மாணவ- மாணவியர்களிடையே கட்டுரை போட்டி, கவிதைப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு விருந்தினராக
மதிமுக மாநில துணை பொதுசெயலாளர் மல்லை சி.இ.சத்யா கலந்துக் கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தேவநாத்வெங்கடேசன், ஜான், ஆனந்த், மாஸ்டர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாணவ- மாணவியர்களின் நடனம், நாடகம், போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. முடிவில் பள்ளி ஆசிரியர் ரூபியா நன்றி கூறினார்.
No comments