உத்திரமேரூர் பள்ளி கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்
உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
உத்திரமேரூர் ஜன,13
உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று சமத்துவ பொங்கல்
விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் நந்தன்
தலைமை தாங்கினார். உத்திரமேரூர் பிரேம்ராஜ் ஜெயின் பாரஸ்மல் முன்னிலை
வகித்தார். பள்ளி மாணவிகள் பொங்கலிட்டு சூரியனை வழிபட்டு மகிழ்ச்சியாக
கொண்டாடினர். பின்னர் உறியடிப் போட்டி நடைப்பெற்றது. போட்டியில் வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவியர்
அணைவருக்கும் உத்திரமேரூர் பிரேம்ராஜ் ஜெயின் குடும்பத்தினர் சார்பில்
பாரஸ்மல் சக்கரை பொங்கல் வழங்கினார். முடிவில் கணித ஆசிரியர் மாரியப்பன்
நன்றி கூறினார்.
நன்றி கூறினார்.
No comments