Disqus Shortname

காஞ்சீபுரம் பள்ளிக்கு சென்ற பிளஸ்–2 மாணவன் மாயம்

காஞ்சீபுரம், ஜன. 21–
உத்திரமேரூரை அடுத்த மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் அரிகரன். இவரது மகன் காமேஷ் (17). காஞ்சீபுரம், ஒரிக்கையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காமேஷ் பிளஸ்–2 படித்து வருகிறார். கடந்த 17–ந்தேதி ஸ்பெஷல் கிளாஸ் நடப்பதாக கூறினார்.
எனவே மாணவர் காமேஷ் அன்று காலை பஸ்சில் காஞ்சீபுரம் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
மாணவன் வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை அரிகரன் உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவன் காமேசை தேடி வருகிறார்கள்.
மாணவன் வேறு ஊருக்கு சென்று விட்டானா? மாயம் ஆக காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

No comments