Disqus Shortname

தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்

உத்திரமேரூர் ஜன,26

உத்திரமேரூர் ஒன்றியம் –பேரூர் தி.மு.க சார்பில் மொழிப்போர்
தியாகிகளுக்கு வீரவணக்க நாள் மாபெரும் பொதுக் கூட்டம் உத்திரமேரூர்
பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது.  ஒன்றிய செயலாளர் கெ.ஞானசேகரன்
தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர் இரா.ஸ்டாலின், ஒன்றிய அவைத்
தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் பேரூர்
செயலாளர் பாரிவள்ளல் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் தலைமைகழகப்
பேச்சாளர்கள் கவிஞர்ஆழியான், சன்.கோ.ஆறுமுகம், விவசாய அணி அமைப்பாளர்
சோழனூர் மா.ஏழுமலை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக மொழிப்போர்
தியாகிகளின் படங்களுக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன்,
டி.கே.கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் ஏ.கே.ரமேஷ்பாபு உட்பட பொது மக்கள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments