Disqus Shortname

உத்திரமேரூர் அருகே 14 பவுன் நகை, பணம் கொள்ளை

உத்திரமேரூர் ஜன21
உத்திரமேரூர் அருகே 14 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உத்திரமேரூர் அடுத்த அழிசூர் கிராமத்தில் வசிப்பவர் வெங்கடேசன் (46). வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை மற்றும் டிபன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நாகம்மாள், பார்வதி ஆகிய இரு மனைவிகள் உள்ளனர். இவர்கள் கணவருக்கு உதவியாக இருந்து வருகின்றனர். இவர்களது உறவினர் மகன் சண்முகவேல் (16), இங்கேயே தங்கி படித்து கடையில் வேலையும் பார்த்து வருகிறான்.நேற்றிரவு கடையில் வேலை இருந்தது.

இதனால் நள்ளிரவு 12 மணிக்கு பிறகுதான் கடை பூட்டப்பட்டது. அனைவரும் தூங்க சென்றனர். அதிகாலை 5 மணியளவில் எழுந்தனர். அப்போது பீரோ திறந்து கிடந்தது. துணிகள் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 14 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. இதுகுறித்து பெருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இதில், வீட்டின் மாடியில் உள்ள கதவு திறந்திருந்தது. அதன் வழியாக கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நகை, பணத்தை அள்ளி சென்றது தெரிந்தது. கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments