Disqus Shortname

விவசாயிகளுக்கான அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம்

உத்திரமேரூர் ஜன,09
உத்திரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் கிராமத்தில் உள்ள ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கம் விவசாயிகள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் சார்பில் கட்டியாம்பந்தலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்டியாம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமை தாங்கினார். கட்டியாம்பந்தல் ஏரி நீர் பயன்படுத்தும் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ரகுபதி முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை துறை இயக்குனர் கிருஷ்ணவேணி கலந்து கொண்டு சங்க நிர்வாகிகளை அறிமுக படுத்தி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கள ஒருங்கிணைப்பாளர்கள் சிங்கரவேலன், நடராஜன், வார்டு உறுப்பினர் தேவேந்திரன் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments