Disqus Shortname

உத்தரமேரூர் கூட்டுறவு கடன் சங்கம் 108 ம் ஆண்டு பேரவை கூட்டம்

உத்திரமேரூர் ஜன, 10
உத்தரமேரூர் நகர கூட்டுறவுக் கடன் சங்கமானது 2013-14ஆம் நிதி ஆண்டில் ரூ.3 கோடியே 19 லட்சத்து, 17 ஆயிரத்து 586 லாபம் பெற்றுள்ளது என அதன் தலைவர் வி.ஆர்.அண்ணாமலை கூறினார்.
இசங்கத்தின் 108ஆம் ஆண்டு நிறைவு விழாவும், பேரவைக் கூட்டமும் சனிக்கிழமை நடைபெற்றன. இவ்விழாவில் அண்ணாமலை பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்.
கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: சிட்டா அடங்கல் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் 2 மூட்டை யூரியா வீதம் 15 டன் வழங்கப்பட்டுள்ளது. 10ஆம் 25 டன் யூரியாவும், 12ஆம் தேதி 25 டன் யூரியாவும் வழங்கப்படும் என்றார்.
சங்கத் துணைத் தலைவர் பொ.சசிக்குமார், சங்க இயக்குநர்கள் கே.முனுசாமி, கே.தயாளன், எம்.கே.பி.வேலு, இ.தயாளன், என்.சத்யா, எம்.சுதா, ஜி.ஏழுமலை, பி.ஏ.பூங்காவனம், வங்கிச் செயலர் என்.தயாளன், முன்னாள் செயலர் எஸ்.சண்முகசுந்தரம், முதுநிலை எழுத்தர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments